விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. காவியாவை ஏற்றுக்கொள்வதாக பார்த்திபன் சொல்லி இருந்தாலும் பிரித்து தான் வைத்துள்ளார். காவியா எவ்வளவு சமாதானம் சொல்லியும் பார்த்திபன் கேட்பதாக இல்லை.
அனைவர்க்கும் மத்தியில் காவியாவுடன் அன்பாக இருப்பது போல நடித்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில், காவியா கர்ப்பமாக இருப்பது அனைவருக்குமே அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு என்ன நடக்கும்?? பார்த்திபன் இதன் பிறகாவது மனம் மாறுவாரா?? என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, பார்த்திபன் ஏற்றுக்கொண்ட பிறகு தான் காவியா தான் கர்ப்பமான விஷயத்தை சொல்ல போகிறார். காவியாவின் நடவடிக்கையை வைத்து வீட்டில் உள்ளவர்கள் இதனை கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் தான் பார்த்திபனுக்கு உண்மை தெரிந்து, இந்த குழந்தைக்கு நான் தான் அப்பாவா?? என்று சந்தேகிப்பாராம். அதனை பொறுத்து கொள்ளாத காவியா பார்த்திபனை விட்டு பிரிந்து விடுவாராம். அடுத்தடுத்து காட்சிகள் இப்படி தான் இடம் பெறுமாம்.
தனுஷ் பட நடிகர் திடீர் மரணம்., சோகத்தில் திரையுலகம்!!