![ச்சீ.., தம்பியை காதலிச்சுட்டு அண்ணானை கல்யாணம் பண்ணிக்கிற.., காவியாவின் துரோகத்தால் கதறும் பார்த்திபன்!! ச்சீ.., தம்பியை காதலிச்சுட்டு அண்ணானை கல்யாணம் பண்ணிக்கிற.., காவியாவின் துரோகத்தால் கதறும் பார்த்திபன்!!](https://enewz.in/wp-content/uploads/2023/04/maxresdefault-8-1-696x392.jpg)
ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, காவியாவும், ஜீவாவும் காதலித்த விஷயத்தை ஊரறிய சொல்ல போகிறார் தேவி. அதாவது காவியா-பார்த்திபன் ரிசெப்சன் விழா பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேவி வந்து பெண்ட்ரைவை கொடுத்து, led-யில் திரையிட சொல்கிறார்.
என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்க சீரியல் அதனுடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து ஹின்ட் கிடைத்துள்ளது. அதாவது காவியா-ஜீவா காதலித்த விஷயத்தை அம்பலப்படுத்த இதனால் அனைவருமே கூனி குறுகி போய்விடுவார்களாம். ப்ரியா தனது தங்கை வாழ்க்கையை தானே கெடுத்து விட்டோமே என்று கதறுவாராம்.
மேலும் பார்த்திபன் தம்பி காதலித்த பெண்ணையா திருமணம் செய்துள்ளோம் என்று பதறுவாராம். இந்த உண்மையை ஏன் மறைச்சீங்க என்று பிரியா பார்த்திபன் சண்டை போடுவார்களாம். இதற்கும் மேல் இந்த ஜோடிகள் சேர்ந்து வாழுமா?? இல்லை பிரிவு தான் மீண்டுமா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.