சமீபத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம் பெண்ணின் சடலத்துடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அலகாபாத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சத்யம் சிங் என்பவர் ஸ்மிருதி சிங்கை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து ஸ்மிருதி சிங் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆத்திரம் அடைந்த சத்யம் சிங் வழக்கு தொடர்ந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, சத்யம் சிங் உங்கள் திருமணம் சப்தபடி சடங்கு (அக்னியை 7 முறை சுற்றுதல்) படி நடைபெற்றதா இல்லையா என்று கேட்டார். இந்து திருமணச் சட்டப்படி, சப்தபடி சடங்குபடி நடைபெறவில்லை என்றால் அந்த திருமணங்கள் செல்லாது. எனவே அந்த சடங்கு நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்கவில்லை என்பதால்,உங்கள் மனைவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும், அவருக்கு எதிராக நீங்கள் தொடுக்கப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
விஜய் செய்றதெல்லாம் நீங்களும் செய்வீர்களா., இதை ஏத்துக்க முடியாது., சீமான் அதிரடி பேட்டி!!