தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் கனெக்சன் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இதற்கு பல்வேறு தகவல்களையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1-SDFSDZ-1024x626.jpg)
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளிலும் BSNL மூலம் தான் இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும். மேலும் வேறு எந்த நிறுவனங்களில் இருந்து இன்டர்நெட் கனெக்சன் கொடுக்க கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி கல்வித்துறை கூடிய விரைவில் இன்டர்நெட் சேவையை கொண்டு வருவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.