சின்னத்திரை ஜோடியான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது இவர்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சீவ் – ஆல்யா மானசா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர்கள் தான் சஞ்சீவ் – ஆல்யா மானசா. அந்த தொடரில் ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் தற்போது ரியல் ஜோடியாக மாறி இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளனர். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் கலக்கி வரும் நிலையில், தற்போது ஆல்யா மானசாவும் இனியா சீரியல் மூலம் சன் டிவியில் நுழைந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி சீரியலில் இருவரும் பிசியாக இருந்து வந்தாலும், தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் வெளியூர் செல்வதற்கு தனியார் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்துள்ளனர். அதன் பின்னர் விமானத்தை பிடிப்பதற்கு வேகமாக சென்ற சஞ்சீவ் – ஆல்யா மானசா கிட்டத்தட்ட 9 மணி நேரம் வெய்ட் செய்துள்ளனர். ஆனால் விமானம் மட்டும் வரவே இல்லை. அவர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த நபர்கள் என அதிகமானோர் வெய்ட் செய்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் 3 லிஸ்டில் கண்டிப்பா இவங்க இருப்பாங்க.., வெளிவந்த உண்மை!!
அதில் ஒரு பெண் வாந்தியும் எடுத்துள்ளார். அதை பார்த்த சஞ்சீவ் – ஆல்யா மானசா மற்றும் பலர் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த நிறுவனத்தில் யாரும் விமான டிக்கெட் புக் செய்யாதீர்கள் என்று கொந்தளித்து பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.