நடிகர் தனுஷ் கூறிய உபதேசத்தை பல்வேறு தரப்பினரும், பல்வேறு விதமாக கடும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ்:
கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம், மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் தனுஷ். மிகக்குறுகிய காலத்தில் ஹாலிவுட், பாலிவுட் என உலக சினிமாக்களில் வலம் வந்து கொண்டுள்ளார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் மேடையில் பேசிய வார்த்தைகள் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீடு நிகழ்ச்சியில் “நண்பனுக்கு ஒரு கஷ்டம்னா கழுத்துல உள்ள செயின கூட கழட்டி கொடுக்கணும்” என்று மேடையில் பேசி இருந்தார்.
விமான நிலையத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவிற்கு ஏற்பட்ட சங்கடமான நிலை.., இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!!
ஆனால் தனுஷை திரையுலகில் அறிமுகப்படுத்தி, பல வெற்றி படங்களை கொடுத்த தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய இத்தனை வருடம் தத்தளித்து வந்துள்ளார். சமீபத்தில் தான் முழு கடனையும் அடைத்ததாக பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து கூட இருந்தவரை தவிக்க விட்டு விட்டு விளம்பரத்திற்காக மேடையில் பெருமை பேசி வருகிறார் என சினிமா வட்டாரங்கள் கேலி செய்து வருகின்றனர்.