‘துணிவு’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்படி இருக்க ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நாளை முதல் துவங்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்காக நடிகர் அஜித்குமார், த்ரிஷா உட்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த தகவலை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார். அஜர்பைஜானில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்ப இருக்கிறார்களாம்.