தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை திரிஷா, அர்ஜுன் மற்றும் அரவ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார் என்று சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
பிரபல சின்னத்திரை நடிகை புற்றுநோயால் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தற்போது நடிகர் அஜித் குமாரின் உடல்நலம் குறித்து அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். அதில், நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.