இந்திய அரசானது மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதுடன் அதனை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை எல்லாம் மக்கள் பெறுவதற்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட இந்திய குடிமகன் என்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. இவைகளில், ஆதார் எண்ணை பான் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் புக் உள்ளிட்டவைகளில் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் ஆதார் கார்டு அட்டைதாரர்கள் பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது, ஆதார் கார்டை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு பொதுவாக ரூ. 50 வசூலிக்கப்படும். ஆனால், வரும் ஜூன் 14ம் தேதி வரை இதற்கான இலவச சேவை இந்த ஆணையம் அறிவித்துள்ளது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சேரனை கத்தவிட்ட பிரபல இயக்குனர்.., அவரிடம் இருந்து எஸ்கேப்பாக இதான் காரணமா?
அதாவது, uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், மின்னஞ்சல், மொபைல் எண் உள்ளிட்ட அட்டைதாரர் தரவை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள கூடிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், புகைப்படம், கைரேகை, கருவிழி, உள்ளிட்ட பிற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கு, ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று தேவையான கட்டணத்தைச் செலுத்தி தான் அப்டேட் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.