மத்திய அரசு வழங்கியுள்ள முக்கிய ஆவணமான ஆதார் பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தி உள்ளது. இந்த அப்டேட்டை கட்டணமில்லாமல் இலவசமாக செய்து கொள்ள வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இதற்கான காலக்கெடு ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதலாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி 2024 செப்டம்பர் 14ஆம் தேதி வரை இலவச சேவையை பயன்படுத்தலாம். இதற்கு https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பெயர், முகவரி உள்ளிட்டவைகளை கட்டணமில்லாமல் மாற்றலாம் என அறிவுறுத்தி உள்ளது .