ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆபர் மழை..!

0

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் கார் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் ஆபர்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. பிலிப்பைன்சிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 133 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார் நிறுவனங்கள் ஆபர் மழையை அறிவித்து உள்ளன.

அந்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தில் சாண்டா ஃபீஇ சொகுசுகாரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த ரக காரை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ரெய்னா செடான் கார் இலவசமாக கிடைக்கும் . இந்த வகை கார் இல்லாவிட்டால் ஆபரை பொறுத்து ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள அசண்ட் கார் இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.

சீன செயலியான டிக்டாக் தலைமையிடத்தை மாற்ற நிர்வாகிகள் ஆலோசனை..!

மேலும் கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ரூ.1,500 கொடுத்து புதிய காரை ஓட்டிச் செல்லலாம் என அறிவித்துள்ளது. மீதி தொகையை தவணையில் கட்டிக்கொள்ளலாம் என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here