சீன செயலியான டிக்டாக் தலைமையிடத்தை மாற்ற நிர்வாகிகள் ஆலோசனை..!

0

தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக்டாக் தனது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

டிக்டாக் நிறுவனம்..!

சீனாவை தலைமையிடமாக கொண்ட சீனா நிறுவனமான டிக்டாக் செயலியை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வந்தன. இந்தியாவில் லடாக் பகுதயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. இதேபோல் அமெரிக்காவும் கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவுவதற்கு சீனா தான் காரணம் என கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் ஹாங்காங்கில் சீனா கடுமயைான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் அங்கும் தனது நடவடிக்கையை வாபஸ் பெற்றுள்ளது டிக் டாக் நிறுவனம் டிக்டாக் நிறுவனம் ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன்,டப்ளின், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.  இதையடுத்து இந்தியா, அமெரிக்கா டிக் டாக் செயலியை தடை செய்துள்ளதால் டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் 8ல் ஒரு போட்டோ போலி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

இதனால் சீனாவில் இருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்றுவது மற்றும் புதிய நிர்வாக குழுவை உருவாக்குவது குறித்தும் உலகம் மழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒரு தளத்தை உருவாக்குவது அதன் மூலம் பயனாளர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து சீன நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here