தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் மட்டும் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய திமுக அரசு, இதுவரை இது தொடர்பான நடவடிக்கை எடுக்கவில்லை,
WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!
எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் கொள்முதலை ரத்து செய்து, தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி திருப்பூரில் பேரணி செல்ல இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.