தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என பலரும் போராட்டம் நடத்தினாலும் அதற்கு எந்த பலனும் கிடைத்த பாடில்லை. இப்படி இருக்கையில் தற்போது காரைக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் உரிமையாளர் கடந்த ஏழு மாதங்களாக வாடகை தராமல் கடையை நடத்தி வந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் அந்த இடத்தின் உரிமையாளர் பணத்தை தரும்படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அந்த கடை உரிமையாளர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்த நிலையில் ஓனர் திடீரென டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டார். இது தெரியாத அப்பகுதி மது பிரியர்கள் 12 மணி ஆகியும் கடை திறக்கவில்லையே?? எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக ரயில் பயணிகளுக்கு நற்செய்தி., வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு., இந்த தேதி வரை மட்டும்!!!