ஐசிசி சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணியானது இலங்கை அணியை எதிர்த்து நேற்று (அக்டோபர் 16) லக்னோ மைதானத்தில் போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 43.3 ஓவரில் 209 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து நடப்பு உலக கோப்பையின் முதல் வெற்றியை பெற்றது. இதில், ஜோஷ் இங்கிலிஸ் 58, மிட்செல் மார்ஷ் 58 எடுத்திருந்தனர். இந்த போட்டியில், இலங்கை அணி தோல்வி அடைந்ததன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக தோல்விகளை தழுவிய அணிகளின் வரிசையில் ஜிம்பாப்வே அணியுடன் (42 தோல்விகள்) முதல் இடத்தை பகிர்ந்து கொண்டது.