தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்வையிடவும், செல்பி எடுக்கவும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இப்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் கேரளாவில் நடந்த படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.
மக்களே.., இப்பயே சார்ஜ் போட்டு வச்சுகோங்க.., நாளை இந்த மாவட்ட பகுதிகளில் மின்தடை!!
இதனால் படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக(உயிர் காப்பு மிதவை) அணிந்திருக்க வேண்டும். இது தவிர படகில் பயணிக்கும் போதும் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு படகில் 150 பேருக்கு மேல் ஏறாதவாறு கண்காணிக்க ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.