தமிழக விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, நாளை மறுநாளே கடைசி நாள் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவனத்திற்கு:
விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கிசான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் வறட்சி, வெள்ள நிவாரண திட்டம் போன்ற பல அம்சங்களை விவசாயிகளுக்காக செயல்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில், நடப்பாண்டில் சம்பா நெல் பயிர் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ. 2,239 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த காப்பீட்டு திட்டத்தில் பயன் அடைய, நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
TNPSC குரூப் 1 : முதல் நிலை எழுத்து தேர்வு எழுதிய தேர்வர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியீடு!!
பொது இ சேவை மையம், தொடக்க கூட்டுறவு கடன் வேளாண் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். தற்போது இந்த திட்டத்தை வரும் நவம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.