![இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..! இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!](https://enewz.in/wp-content/uploads/2020/04/india-corona-new-1.jpg)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 23,077 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 718 பேர் உயிரிழந்து உள்ளனர். 4,479 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மே மாதம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என சர்வேதச நிறுவனம் ஒன்றின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/corona-new-4.jpg)
இந்தியாவில் கொரோனவால் உயிர் இறந்தவர்களில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 283 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 112 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 83 பேரும், டில்லியில் 50 பேரும், ராஜஸ்தானில் 27 பேரும், தமிழகத்தில் 20 பேரும் ஆந்திராவில் 27 பேரும் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.
மாநில வாரியாக பாதிப்பு விபரம்:
- மஹாராஷ்டிரா- 6430 பேர்
- குஜராத் – 2,624 பேர்
- டில்லி-2,376 பேர்
- ராஜஸ்தான்-1,964 பேர்
- மத்திய பிரதேசம் – 1699 பேர்
- தமிழகம்-1683 பேர்
- உத்தர பிரதேசம்- 1,510 பேர்
- தெலுங்கானா- 960 பேர்
- ஆந்திரா – 895 பேர்
- மேற்கு வங்கம்-514 பேர்
- கேரளா-447 பேர்
- கர்நாடகா-455 பேர்
- காஷ்மீர்-445 பேர்
- பஞ்சாப்-277 பேர்
- ஹரியானா-272 பேர்
- பீஹார் -153 பேர்
- ஒடிசா-90 பேர்
- ஜார்க்கண்ட்-53 பேர்
- உத்தரகாண்ட்-47 பேர்
- ஹிமாச்சல பிரதேசம்-40 பேர்
- அசாம் -36 பேர்
- சத்தீஸ்கர்-36 பேர்
- சண்டிகர்-27 பேர்
- அந்தமான்-22 பேர்
- லடாக்-18 பேர்
- மேகாலயா-12 பேர்
- புதுச்சேரி-07 பேர்
- கோவா-07 பேர்
- திரிபுரா-02 பேர்
- மணிப்பூர்-02 பேர்
- அருணாச்சல பிரதேசம்-01 பேர்
- மிசோரம்-01 பேர்
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |