வருகிற ஜனவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் மது விற்பனை செய்ய தடை விதிப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
செயல்பட தடை :
பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், அரசின் சார்பாக தீவிர கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நம் அண்டை மாநிலமான புதுவையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. உணவகங்கள், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் மதுபான கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வருகிற ஜனவரி 15 தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும், ஜனவரி 18ம் தேதி வள்ளலார் ஜோதி தினம் கொண்டாடப்பட உள்ளதால் இந்த இரண்டு நாட்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மது விற்பனை செய்யும் மது கடைகள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கும் இந்த இரண்டு நாட்கள் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், 199 A பிரிவு (ii) புதுசேரி அரசியல் அமைப்பு சட்டம் 1970 ன் படி அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்