சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பிக்பாஸ் ஜூலிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
குவியும் பாராட்டு:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் ஜூலி. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும், ஓவியாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து, இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். தற்போது மாடலிங் துறையில் கால் பதித்துள்ள இவர், பொது மக்களுக்கு முக்கிய சேவை ஒன்றை செய்துள்ளார். அதாவது, சென்னை, மழை பாதித்த பகுதிகளில் ஒன்றான சூளைமேடு கொளத்தூர் பகுதிகளில் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி அந்த மக்களுக்காக ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்