நடிகை ராஷ்மிகா மந்தனா கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று அதற்கு முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என்று எழும்பிய புகாரினைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் கீதா கோவிந்தன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு இவர் சம்பளமாக 1 கோடி ரூபாய் சம்பளம் பணமாக பெறுவதாகவும் அதற்கு வருமான வரி முறையாக செலுத்துவதில்லை எனவும் புகார் எழுந்தது.
இதனால் வருமான வரித்துணையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ருபாய் ரொக்கமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.