தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 5, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரியத் தேர்வு (பொதுத்தேர்வு) நடத்த வேண்டும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முன்மொழிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி சங்கங்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., இதை உங்க நிறுவனம் செய்யவில்லையா?? EPFO விடுத்த எச்சரிக்கை!!!
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், 5, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த வகுப்புகளுக்கான வாரியத் தேர்வு நடத்த வேண்டும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர்.