இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக விளங்கிய உபெர் ஈட்ஸ்-ஐ சொமாட்டோ நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உணவு டெலிவரி சேவைகளில் சொமேட்டோ, ஸ்விகி, உபேர் ஈட்ஸ் போன்றவை முன்னணியில் உள்ளன. இதில் உபெர் ஈட்ஸ் போட்டிகளின் காரணமாக தத்தளித்து வந்தது.
வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்
ரூ. 2489 கோடி பங்கு
தொழில் நெருக்கடியால் உபெர் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையான உபெர் ஈட்ஸ்-ஐ சொமாட்டோவிடம் விற்றுவிட்டது. இதற்காக சொமேட்டோ 10 சதவீத பங்குகளை உபேருக்கு வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த பங்கு மதிப்பு 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், ரூ.2489 கோடி) என கூறப்படுகிறது.
டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்
யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்
உபெர் ஈட்ஸ் அதன் தொடர்பில் இருந்த நேரடி உணவகங்கள், டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் பயனாளர்கள் சொமேட்டோ உடன் இணைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. இனிமேல் உபெர் ஈட்ஸ் வாடிக்கையாளர்கள் சொமேட்டோ அப்ப்ளிகேஷன் இல் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மேலும் உபேர் நிறுவனம் தனது டாக்ஸி சேவையை தொடர்ந்து வழங்கும் கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |