டெல்லி CAA போராட்டத்தில் வெடித்தது வன்முறை – தலைமை காவலர் உயிரிழப்பால் பதற்றம்..!

0
நாட்டில் திடீரென அமலுக்கு வந்த அவசரநிலை பிரகடனம் - அரசு எடுத்த திடீர் முடிவு!

டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் வீசிய கல்லால் காயமடைந்த தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

போராட்டம் – கலவரம்..!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் தீடிரென வன்முறை வெடித்தது. இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தலைமை காவலர் ரத்தன் லால் போராட்டக்காரர்கள் வீசிய கல்வீச்சில் காயமடைந்து உயிரிழந்தார்.

144 தடை உத்தரவு..!

போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள 10 இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற கலவரம் நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை ககுறித்து கேள்வி கேட்பதாக உள்ளது. ஒரு புறம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் இந்தியா கலைக்கட்டியுள்ள நிலையில் மறுபுறம் போராட்டத்தில் கலவரம் உண்டாகி உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here