விஜய் சேதுபதி செய்த டீவீட் வைரலாகும் வீடியோ.ஆமாம் இதற்குதானை ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்க போகும் படத்தின் புரோமோ டீவீட் செய்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
இயக்குனர் கோகுல்
![rawthiram](https://enewz.in/wp-content/uploads/2020/06/rawthiram.jpg)
ஜீவா நடித்த ரௌத்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல்.பின் காஷ்மோரா,ஜூங்கா போன்ற படங்களை இயக்கினா ஆனார் விஜய் சேதுபதி அஸ்வின் போன்ற நடிகைகளை வைத்து எடுத்து பெரியளவில் ஹிட் ஆனா படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மீண்டும் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- இரண்டாம் பாகம்’ எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் எனத் தகவல் வெளியானது.அந்த படத்திற்கு கொரோன குமார் என டைட்டில் வைக்க போவதாக கூறியுள்ளார் கோகுல்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இயக்குனர் கோகுலின் “கொரோன குமார்”
கொரோன குமார் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் ‘மக்கள் ஹேப்பி அண்ணாச்சி’ என விஜய் சேதுபதி தனது ட்ரேட்மார்க் வசனத்தை இந்த ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ஆம் பாகமாக கொரோனா குமார் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது அதில் இயக்குனர் கோகுல் தன்னை சுற்றி மது பாட்டில்களுடன் அமர்ந்து இந்த படத்திற்காக ஸ்க்ரிப்ட் எழுத தொடங்குகிறார் என்பது போல காட்டப்படுகிறது. ஊரடங்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தினை நாயகனாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளியான படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படம் 2013ல் வெளி வந்தது. அதில் விஜய் சேதுபதி, நந்திதா, சுவாதி ரெட்டி, அஸ்வின், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது.இந்த படம் வந்து ஏழு வருடங்கள் கழித்து
Makkal happy annachi ❤️
Here's the smashing title promo of @DirectorGokul upcoming comic riot – #CoronaKumar
A spin-off that will bring the roof down?https://t.co/LOh9sBko2g@sathishoffl @cinemawalaoffl @thinkmusicindia @PradeepERagav @sidvipin @palanibalan1 @proyuvraaj ?? pic.twitter.com/CIGpWgZIYO— VijaySethupathi (@VijaySethuOffl) June 17, 2020
தற்போது அதன் ஸ்பின் ஆப் படமாக ‘கொரோனா குமார்’ என்ற புதிய படம் உருவாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.ஸ்பின் ஆப் எனப்படும் படங்கள் பொதுவாக ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவை.ஒரு கதை தொடர்ச்சியாக ஒரு புது படம் வருமானம் அதை சீக்குவல் என்பார்கள். அதுவே அந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் கிளை கதையாக ஒரு படம் வருமானால் அதற்குப் ஸ்பின் ஆப் என்று பெயர்.
கொரோன குமார் படத்தின் நடிகர்கள்
![corona kumar](https://enewz.in/wp-content/uploads/2020/06/corona-kumar-2-300x172.jpg)
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிக்கிக் கொண்டு என்னல்லாம் செய்கிறான் என்பது பற்றியது தான் படம் நல்ல கருதும் சமூக கதை என இயக்குனர் கூறியுள்ளார். கொரோனா குமார் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்துக்கான ஷுட்டிங்கை தற்போது துவங்க கோகுல் தயாராகி வந்த நிலையில் இரண்டாவது முறையாக சென்னையில் முழு அடைப்பு போடப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட முழு அடைப்பு முடிவு பெற்ற பிறகுதான் கொரோனா குமார் பட சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.