தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வித் திறனுடன் சேர்ந்த கலைத்திறனிலும் நல்ல கைதேர்ந்தவர்களாக இருக்க பல புது புது திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போது பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இனிவரும் நாட்களில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதன் படி பள்ளி வளாகங்களில் அமைக்கப்படும் இந்த தோட்டங்களில் உள்ள காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனிவரும் நாட்களில் காய்கறித் தோட்டத்தை எப்படி பள்ளி நிர்வாகம், மாணவர்கள் பராமரிக்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் விருது வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
டிசம்பர் மாத மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கெல்லாம் வந்துருச்சா?? வெளியான முக்கிய தகவல்!!