மீண்டும் இணைந்த மாமன்னன் கூட்டணி.. பொங்கலுக்கு பின் தொடங்கும் படப்பிடிப்பு!!

0

கோலிவுட் திரையில் ரசிகர்களால் வைகை புயல் என அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் வடிவேலு. இவர் காமெடியில் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான ”மாமன்னன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டு கிடைத்திருந்தது. இந்த நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படத்தை சூப்பர் குட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தை மலையாள திரைப்பட இயக்குனர் சதீஷ் சங்கர் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 3வது வாரத்தில் திருவண்ணாமலையில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் அதிக அளவில் பேசப்பட்ட நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு எல்லாம் மாறிடும்…, அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here