பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ் அமிர்தாவிடம் தன்னுடன் வரும்படி கெஞ்சினார். ஆனால் அவர் எழிலை விட்டு வர முடியாது என மறுத்து விட்டார். இந்நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படி இந்த பிரச்சனையை சரி செய்ய போகிறோம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இப்படி இருக்கையில் கணேஷ் அமிர்தாவை தன்னுடன் அழைத்துச் செல்ல பல வேலைகளை செய்வாராம். குறிப்பாக போலீஸ் உடன் வந்து வீட்டில் பிரச்சனை செய்ய ஆனால் அமிர்தா எனக்கு எழில் தான் முக்கியம் என சொல்லி விடுவாராம்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1-jhkjh-1024x626.jpg)
கணேஷ் என்ன முயற்சி செய்தும் அமிர்தா வர மறுத்து விடுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் எழில் உயிருடன் இருந்தால் நீ நிச்சயம் என் கூட வர மாட்ட. உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்பாராம். மேலும் எழிலை கொலை செய்தால் தான் நீ என்னுடன் வருவாய் என்றால் அதையும் நான் நிச்சயம் செய்வேன் என முடிவு எடுப்பாராம்.