தமிழகத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர், கோவை வழியாக முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
பெரும்பாலான பயணிகள் பொதுப் போக்குவரத்துக்கு, அதிகம் பயன்படுத்தும் முக்கியமான சேவைகளில் ஒன்று ரயில். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை அளிப்பதால், தொலைதூர மற்றும் அருகாமை பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், வெளியூர்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், கோவை மற்றும் கரூர் வழியாக முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
EPFO பயனர்களுக்கு ஜாக்பாட்., உங்களுக்கு துட்டு கொட்ட போகுது! இதை மட்டும் மறக்காம செய்யுங்க!!
அதாவது கோவை வஞ்சிபாளையம் – சோமனூர், குளித்தலை -பேட்டைவாய்த்தலை, சாமல்பட்டி -தசம்பட்டி -தாதம்பட்டி, உள்ளிட்ட வழித்தடங்களில், இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.