தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதமே இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், முகாம்கள் அமைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கடந்த ஜூலை 24ம் தேதி முதல் பெறப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் முதற்கட்ட முகாம் நாளை (ஆகஸ்ட் 4) முடிவடைய உள்ள நிலையில், இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதற்கட்ட முகாமில் விடுபட்டவர்கள், 2ம் கட்ட முகாம்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரலாம் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது, வரை 75 லட்சம் விண்ணப்பங்கள் இந்த உரிமை தொகையை பெற பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது