தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் முக்கிய ஆலோசனை!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

Tamilnadu CM
Tamilnadu CM

இந்நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்காத நிலையில் அதனை எப்போது தொடங்குவது மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வித்துறை செயலாளர் நீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பள்ளிகளை மீண்டும் திறப்பது, 10ம் வகுப்பு முடிவுகள் வெளியான நிலையில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு ரிசல்ட் வராதது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – மாநில அரசு அதிர்ச்சி!!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததால் விரைவில் முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here