தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ வெல்லம், பச்சரிசி, கரும்பு உட்பட ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த பரிசு தொகுப்பு ஜனவரி 10ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது மாதந்தோறும் 2வது, 4வது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதால் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் அந்த நாளில் வழக்கம் போல் கடைகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.