தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு அரசு தரப்பில் பரிசு தொப்பை வழங்குவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ. 1000 ரொக்கத் தொகையாக அரசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பொங்கல் பரிசை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான நேரம் மற்றும் நாளை குறிப்பிட்டப்பட்டுள்ள டோக்கன்களை நாளை (ஜனவரி 7) முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும். இந்த குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசை வாங்க இயலாதவர்கள் ஜனவரி 14 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.