தமிழக முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டன் கீழ், தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 1000-யை அவர்களது வங்கி கணக்கிற்கே நேரடியாக அரசு அனுப்பி வைத்து வருகிறது. இதற்கிடையில், இந்த திட்டத்திற்கு 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 55 லட்சத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, நிராகரிக்கப்பட்ட காரணத்தை அறிந்து மறு விண்ணப்பம் செய்து கொள்ளவும் முதல்வர் சில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்நிலையில், இந்த (அக்டோபர்) மாதத்திற்கான உரிமைத் தொகை முன்கூட்டியே வரும் அக்டோபர் 14 ஆம் தேதியே இத்திட்டத்தின் பயனாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி இனிப்பு விற்பனை இந்த தேதியில் தொடங்கும்., ஆவின் நிறுவனம் கொடுத்த முக்கிய அறிவிப்பு!!