தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 16) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காக்கும் 5 ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும்,
- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது
- மாற்றுத்திறனாளிகளுக்கு மகளிர் உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது
- மாற்றுத்திறனாளிகளுக்கு 22 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. எனவே தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலன் காக்கும் அரசாக உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.