![டேய்.., அர்ஜுன் இப்படி மாட்டிக்கிட்டியே.., கோதைக்கு காத்திருக்கு பேரதிர்ச்சி.., மாஸ் காட்டிய தமிழ்!! டேய்.., அர்ஜுன் இப்படி மாட்டிக்கிட்டியே.., கோதைக்கு காத்திருக்கு பேரதிர்ச்சி.., மாஸ் காட்டிய தமிழ்!!](https://enewz.in/wp-content/uploads/2023/06/sddefault.jpg)
தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்பொழுது எலெக்ஷனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அர்ஜுன் வந்து தமிழிடம் சவால் விட்டு சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், கோதை அர்ஜுனின் பித்தலாட்டத்தை உணராமல் தமிழை ஜெயித்து காட்டுவேன் என்று கங்கணம் கட்டி கொண்டுள்ளார்.
தமிழ் ஜெயித்தால் தன் உயிர் போனதற்கு சமம் என்று வேறு பேசிகொண்டுள்ளார். அர்ஜுனுக்காக தானே இறங்கி போய் ஒவ்வொரு ஆபீஸாக பேசிகொண்டுள்ளார். அதே சமயம் தமிழும் விடா பிடியாக தனது முயற்சியை போட்டு வருகிறார். இந்நிலையில் முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது, இந்த எலெக்ச்சனில் ஜெயிக்க போவது யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தமிழ் தான் இந்த எலெக்ச்சனில் ஜெயிக்க போகிறார். அதன் பிறகு அர்ஜுனின் ஆட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் விழ ஆரம்பிக்கும். கோதைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை புரியவும் ஆரம்பிக்கும். இதனை வைத்து தான் அடுத்தடுத்து கதை நகரப்போகிறது.