![தமிழகத்தில் இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலெக்டரிடம் கோரிக்கை!!! தமிழகத்தில் இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலெக்டரிடம் கோரிக்கை!!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/FEA-4-3-768x576.jpg)
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கேரள மக்கள் அதிகம் உள்ள சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை தினத்தன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
நடப்பு ஆண்டில் இதுவரை சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டுமே ஓணம் பண்டிகையன்று (ஆகஸ்ட் 29) பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள 7 மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகையை யொட்டி உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., மத்திய அரசு அதிரடி!!!