தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றால் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிப்பதால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை அவசர கடிதம் எழுதி உள்ளது. அதில் கனமழையால் ஏற்படும் தேவைகளை சமாளிக்கவும், மாவட்ட நிர்வாகங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களை கையாளுவதற்கான நடைமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தி உள்ளனர்.