பள்ளி மாணவர்களுக்கு, 2 நாட்கள் தொடர் தீபாவளி விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை அறிவிப்பு:
தீபாவளி பண்டிகை வருகிற அக். 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில், சில கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது. அதாவது திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடி விட்டு அடுத்த நாளே, பணிக்கு திரும்புவது சிரமம் என்பதால் செவ்வாய்க்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரப்பட்டது.
தமிழக அரசு இது குறித்து இதுவரை முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த நிலையில் தெலுங்கானாவில், தீபாவளி பண்டிகை விடுமுறையாக அக்டோபர் 25 ஆம் தேதியை சமீபத்தில் அரசு அறிவித்தது. ஆனால், மாநிலத்தில் உள்ள பண்டிதர்கள் திங்கட்கிழமை தீபாவளி என்று தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் எழுந்ததால், மீண்டும் அதை மாற்றி அக்.24 ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி விடுமுறை என அரசு அறிவித்தது. இதையடுத்து, ஞாயிறு மற்றும் திங்கள் என 2 நாட்கள் தொடர் தீபாவளி விடுமுறை தெலுங்கானா மாநில பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தசரா பண்டிகைக்கு 15 நாட்கள், மழைக்கால விடுமுறை எனத் தொடர்ந்து விடுமுறைகள் விடப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாதத்தின் 2வது சனிக்கிழமை வகுப்புகளை நடத்த, கல்வித்துறைக்கு உத்தரவிடுமாறு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது.