
தமிழகத்தில் பேருந்தில் செல்லும் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பெரும் அசம்பாவிதம் நிலவுகிறது. இந்நிலையில் சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்து வந்த பள்ளி மாணவர்களை, பா.ஜ.க. பிரமுகரும் துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி மாணவர்களை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகவே ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்து ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மாணவர்களை தாக்கியது மற்றும் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இவரின் கைது குறித்து பலரும் கலவையான விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் சரிவை சந்திக்காத சின்ன வெங்காயம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??