இந்திய அணி இப்போது இலங்கைக்கு எதிரான T20 தொடரில் விளையாடுவதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியை தொடர்ந்து இந்தியா அடுத்ததடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் விளையாட உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி தொடர்ந்து போட்டிகள் இருக்கும் இந்த நேரத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் சில மாதங்கள் போட்டியில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இவர் இந்திய அணியில் இல்லாததால் இவர் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கண்ணம்மாவை ஒதுக்கிவிட்டு பாரதியுடன் கூட்டணி வைத்த லட்சுமி.., அதிர்ச்சியில் உறைந்த ஹேமா!!!
இதனால் அடுத்து வரும் போட்டிகளில் ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் ஆகியோரில் யாரை தேர்வு செய்யலாம் என தேர்வுக்கு குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இதில் இஷான் கிஷன் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.