இந்திய அணியின் பல இக்கட்டான சூழ்நிலைகளில் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டும் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு தனி இடம் உண்டு. கடந்த 2009ம் ஆண்டு இந்திய அணியில் ஸ்பின் பவுலராக அறிமுகமாகி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் போட்டியின் நட்சத்திர நாயகனாகவும் வலம் வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் ரோஹித், விராட், ராகுல் என டாப் மற்றும் மிடில் ஆர்டர் கைவிட்டாலும் கடைசி வரை சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டவர். குறிப்பிட்டு சொல்ல போனால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 7வது வீரராக களமிறங்கி 175* ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர். இப்படி பவுலிங், பேட்டிங், பீல்டிங் என ஆல்ரவுண்டராக இருந்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.
ரயில் முன்பதிவு செய்து ரத்தான டிக்கெட் மூலம் இவ்ளோ கோடி வருவாயா?? ஒன்றிய அரசு தகவல்!!!
இந்நிலையில் இந்திய அணியில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.