தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி, இன்று காலை முதல் வாட்டி வதைத்த வெப்பத்தை தணிக்கும் விதமான சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், அடையாறு, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோபாலபுரம், திருவான்மியூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, சேலையூர், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.