![2022 ல் மூன்று வடிவிலும் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே இந்தியர்…, யார் தெரியுமா?? 2022 ல் மூன்று வடிவிலும் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே இந்தியர்…, யார் தெரியுமா??](https://enewz.in/wp-content/uploads/2022/12/fff-shay--768x576.jpg)
2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் பயணத்தை, இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதுடன் முடித்து கொண்டது. இதன் மூலம் தான், இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்தை எட்டியது. இந்த தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் 86, 87 என அதிரடியாக விளையாடினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் இந்த தொடரில் மட்டும் இல்லாமல், 2022 ல் மூன்று வடிவிலும் 14 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 1609 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும், 2022ல் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களுக்கான பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.
சந்தான பாணியை கையில் எடுத்த புரோட்டா சூரி.., நீங்களும் கடைசில இப்படி இறங்கிட்டீங்களே!!
இவர் ஒருநாள் போட்டிகளில் 2022ல் மட்டும் 17 போட்டிகளில் ஒரு சதம் 6 அரைசதம் உட்பட 724 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் இவர், பிசிசிஐயால், ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், 2022 ல் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே ஒரு இந்திய வீரர் என்ற பெருமையும் ஸ்ரேயாஸ் ஐயர் தட்டி சென்றுள்ளார்.