இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (டிசம்பர் 13) தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதாவது, தெலுங்கு டைட்டன்ஸ் 36 புள்ளிகள் எடுக்க, தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இதில், தமிழ் தலைவாஸின் நரேந்தர் 10 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகளுடன் 7 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 32 – 30 புள்ளிகள் எடுத்து தோல்வியை தழுவியது.
Enewz Tamil WhatsApp Channel
விவாகரத்தான பப்லு ப்ரித்வியின் முதல் மனைவியா இது.., இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??