பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது, கண்ணன் பல கோல்மால்களை செய்து விட்டு, பல சிக்கல்களில் தவித்து வந்தார். அண்ணன்களின் உதவியால் தான் இப்பொழுது மீண்டு வந்துள்ளார். மறுபடியும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஆனாலும் மூர்த்திக்கு இன்னும் கோவம் குறையவே இல்லை. இப்படி இருக்க இன்னும் ஜீவா மட்டும் தான் பாக்கி.
அதாவது ஜீவாவும் வீட்டிற்கு வந்து விட்டால் கண்டிப்பாக மறுபடியும் குடும்பம் இணைந்து விடும். மேலும் கதையை தொடர்ந்து கொண்டு போவார்களா?? இல்லை ஜீவா குடும்பத்தில் சேர்ந்ததும் சீரியல் முடிவுக்கு வந்து விடுமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது ஜனார்த்தனன் ஏற்கனவே ஜீவாவை காசு விஷயத்தில் ஏதேதோ பேசி வருகிறார்.
முல்லை குணமடைந்து வந்தால் அன்னதானம் வழங்குவதாகவும் வேண்டியிருந்தார் ஜீவா. அதனை குடும்பத்தில் சொல்ல ஜனார்த்தனன் யாரு காசுல யாருக்கு செய்றது என்று சொல்கிறார். இது மீனாவிற்கு கோவத்தை தூண்ட நீங்க ஜீவா பார்த்த வேலைக்கு சம்பளம்னு ஒன்னு தரவே இல்ல. அதை வச்சு தான் அவன் அதை பண்ண போறான் என்று சொல்லி விடுகிறார். இந்நிலையில் மீண்டும் தற்போது ஜனார்த்தனன் ஜீவாவை எதோ பேசி வம்புக்கு இழுக்க இதனால் கடுப்பாகும் மீனா வீட்டை விட்டே வெளியேறுவாராம்.