பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா கண்ணனை வைத்து தான் சீரியல் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கிய அண்ணனை விட்டுவிட்டு இப்படி புதுசாக வந்த ஐஸ்வர்யா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாரே என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
மேலும் ஐஸ்வர்யா காசு இருக்கும் பகுமானத்தில் அளவுக்கு அதிகமாக செலவு செய்கிறார். மேலும் கடனை வேறு வாங்கி குவித்து கொண்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, கண்ணனுக்கு அடுத்தடுத்து பேங்கில் டார்கெட் வைக்க ஆரம்பித்து விடுவார்களாம்.
வீட்டிலேயே வேலை செய்யாத கண்ணனால் இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் வேலையை விடும் முடிவுக்கு வருவாராம். மேலும் கடன் வேறு அதிகமாகி விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருப்பாராம். அதன் பிறகு அவருக்கு சில காரணங்களால் வேலையும் பறிபோய் விடுமாம். இதனால் ஐஸ்வர்யா வீட்டை விற்ற காசை கேட்டு மூர்த்தியிடம் சண்டை போடுவாராம்.