திருச்சியில் மே 29ம் தேதி வரையில் வெங்காய மண்டி இருக்காது என்று வியாபாரிகள் அறிவித்தனர்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!
மே 29ம் தேதி வரை வெங்காயம் கிடையாது:
இந்தியா முழுவதும் கொரோனா 2ஆம் அலை மக்களை துன்புறுத்தி வருகிறது. நம் தமிழகத்திலும் முழு ஊரடங்கு 14 நாட்களுக்கு போடப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய கடைகளை மட்டும் திறந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தற்போது திருச்சியில் மக்களை வருத்தப்பட செய்யுமாறு ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது வருகின்ற மே 24 முதல் 29ம் தேதி வரை எங்கும் வெங்காய மண்டி இயங்காது என்று வியாபாரிகள் அறிவித்தனர். கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விற்பனையை நிறுத்தி வைப்பதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதனால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!