![அமெரிக்காவில் வெடித்த கலவரம் -மண்டியிட்ட போலீசார்..! அமெரிக்காவில் வெடித்த கலவரம் -மண்டியிட்ட போலீசார்..!](https://enewz.in/wp-content/uploads/2020/06/amer-768x524.jpg)
அமெரிக்காவில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தி வருகிறது கறுப்பினத்தவரின் கொலை சம்பவம், நேற்று வெளியிடப்பட்ட பிரேதபரிசோதனையில் அவர் அவர் கொலை செய்யபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் மேலும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மண்டியிட்டு வருகின்றன.
அமெரிக்கா
அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த மாதம் 25 ந்தேதி கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டங்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை வெடிகுண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தி போராட்டத்தை கலைத்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போட்டிருந்த நிலையி;ல் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போலீசார்
மேலும் போலீசார் இந்த போராட்டக்காரர்களை கட்டி தழுவி ஆதரவு தெரிவித்தனர். மேலும் போராட்டக்காரர்களுடன் மண்டியிட்டு ]கலந்துகொண்டனர். அவர்களுடன் பிரார்த்தனை செய்வது மற்றும் அவர்களின் துக்கத்தில் கலந்துகொள்வது மூலமும் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அவர்களுடன் சேர்ந்து மண்டியிடும் புகைப்படமும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் புகைப்படமும் பரவலாகி வருகிறது.
![AP PHOTOS: A weekend of protests in America - ABC News](https://s.abcnews.com/images/US/WireAP_0e4f7c53520841e488328f5d6524ae3b_16x9_992.jpg)
ஜார்ஜியாவின் அட்லாண்டாவில், கடந்த திங்கட் கிழமை நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா அருகே நடந்த போராட்டத்தின் போது கேடயங்களை வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன் மண்டியிட்டனர்.அதே போன்று டென்வர் காவல்துறைத் தலைவர் பவுல் பாசன் அதே நாளில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து காணப்பட்டார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |