
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்த மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கையை தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று உதாரணமாக அவருடைய இறப்பு இருந்துள்ளது. இப்படி மறைந்த பிரபல நடிகர் மாரி முத்து பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்படி இவர் பணியாற்றிய ஒரு இயக்குனர் தான் எஸ்.ஜே. சூர்யா. அவர் அஜித்தை வைத்து இயக்கிய வாலி படத்தில் மாரி முத்து ஒர்க் செய்யும் போது ஒரு சீனில் நடிங்க என்று எஸ்.ஜே. சூர்யா கேட்டாராம்.அவரின் பேச்சை தட்ட கூடாது என்பதற்காக ஒரு கடையில் வேலை செய்யும் ஊழியராக நடித்து இருந்தார்.அதாவது அந்த சீனில் நடிகர் விவேக் கடைக்குள் நுழைந்து பேசும் போது அவருக்கு ஒரு வார்த்தையில் பதிலளித்து இருப்பார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram